search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்தர் அப்பாஸ் நக்வி"

    கோவாவில் பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி பங்கேற்று பேசுகையில், 2019 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவி காலி இல்லை என தெரிவித்துள்ளார். #PMPost #MukhtarAbbasNaqvi
    பனாஜி:

    மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், கோவாவில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டு மக்களுக்கு தேவையான நல்லாட்சியை வழங்கி வருகிறார்.

    பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கூட்டணி அமைத்துள்ளன. அதில் 20-க்கு மேற்பட்டோர் பிரதமர் பதவிக்கான கனவுகளில் உள்ளனர்.

    ஆனால், அவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவி காலியாக இல்லை. ஏனெனில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உள்ளது என தெரிவித்தார். #PMPost #MukhtarAbbasNaqvi
    இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி இன்று தெரிவித்துள்ளார். #MukhtarAbbasNaqvi
    பனாஜி :

    கோவா மாநிலம், பானாஜியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி இன்று செய்தியாளர்க்ளை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

    இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் சமூகம், பொருளாதாரம், கல்வி மற்றும் மத உரிமைகளோடு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இங்கு பாதுகாப்பாக உள்ளனர். ஆனால், சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க ஒருசிலர் முயன்றனர். அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.

    ஏனெனில், பா.ஜ.க அரசு ஒருபோதும் வாக்குகளுக்காக மட்டுமே, சிறுபான்மையினர் மேம்பாட்டு நல திட்டங்களை செயல்படுத்துவதில்லை. பாகுபாடு இல்லாமல், கண்ணியமான முறையில் நாங்கள் சிறுபான்மையினர் நல திட்டங்களை செய்துவருகிறோம்.

    ஆனால், சிறுபான்மையினருக்கு நாட்டில் அச்சுறுத்தல் இருப்பது போன்று ஒரு சில அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்துவருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக நாட்டில் நடைபெற்ற சிறு சிறு மத மோதல்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் நாட்டில் பெரிதாக எந்த மத கலவரமும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். #MukhtarAbbasNaqvi
    ×